Friday, November 5, 2010

யார் ? சோசலிச மனிதன்

1.மனிதனுக்கு அவனது சமூக உறவுகளுக்கு அவனது ஆக்கத்திறன்களுக்கு முதன்மை தருகிற சமூகம்தான் மனிதர் வாழ்வுக்கான சமூகம்.

2.உழைப்பு மனிதனின் ஆக்கத் திறன்வகைகளை வளர்ப்பதைப் போலவே அவனுக்குள் எல்லாவற்றையும் எல்லோரும் பகிர்ந்து கொள்ளும் மனப்பான்மையை வளர்க்கும்.

3.அரசை, அதிகாரத்தை, பொருள் திரட்டலை, நுகர்வு வெறியை, போதையைப் பெருக்குகிற சமூகம் இறுதியில் தன்னைத் தானே அழித்துக் கொள்ளுகிற சமூகம். 

4. மனிதனுக்கு இருக்கிற மரியாதை இயற்கைக்கும் பிற உயிரினங்களுக்கும் இருக்கத்தான் வேண்டும். நெடுங்கால வரலாற்றின் வழியே பலகோடி மக்களின் ஆக்கச் செயல்கள் மூலம் மனிதன் தனக்கான மாண்பை, கலை, இலக்கியங்களை வளர்த்துக் கொண்டவன். 

5.பிரபஞ்சம் வரை தன் பார்வையை தன் ஆளுமையை பெருக்கிக் கொண்டவன். தன்னை முதன்மைப்படுத்தி இவனால் வாழ முடியாது பொது நலத்துக்காக இவன் தன்னை அழித்துக் கொள்வான். இவன்தான் அசலான மனிதன். 

6.இவனுக்குள் நுகர்வு வெறி இல்லை. அதிகார வெறி இல்லை. இவன் எவரையும் அடிமைப்படுத்த மாட்டான். இவன்தான் சோசலிச மனிதன். இத்தகைய மனிதனைக் கருவாகக் கொண்டதுதான் மார்க்சியம்.

7.இவன் தனியன் இல்லை இயற்கை அளவுக்கு, வரலாற்று அளவுக்குத் தன்னை விரித்துக் கொண்டவன் இவனை ஆண் பெண் என்றோ பிரித்துப் பேசமுடியாது.

No comments:

Post a Comment