Friday, November 5, 2010

மதத்தை எவ்வாறு அணுகச் சொல்லுகிறது மார்க்சியம்?

சமயத்தை ஆத்தீகம் அப்படியே ஏற்றுக் கொள்ளுகிறது. நாத்தீகம் மொட்டையாக நிராகரிக்கிறது.

மார்க்சியத்தின் அணுகுமுறை என்ன? ஒரு கருத்து மக்களைப்பற்றி பிடிக்கும் போது, அது பௌதீக ஆற்றலாகி விடுகிறது என்கிறதே மார்க்சியம்.

சமயக்கருத்துக்கும் இது பொருந்தும்தானே. அப்படியென்றால் சமயத்தைப் புறக்கணிக்க முடியுமா? மார்க்சியம் சமயத்தை ஆய்வு செய்யச் சொல்லுகிறது எனக்கருதுகிறேன். அதன் உள்ளிருக்கும் சமூக ஆக்கக் கூறுகளையும், அழிவுக்கூறுகளையும் பிரித்து அடையாளப் படுத்தி, ஆக்கக் கூறுகளைச் சமூக எழுச்சிக்கு ஆதரவான திசையில் எப்படிப் பயன்படுத்துவது என ஆய்வு செய்ய வழிகாட்டுகிறது மார்க்சியம். சமய ஆற்றல் சமூகத்துக்கு விரோதமாக, மக்கள்திரளுக்கு விரோதமாகப் போகும் நிலையில், அதை எதிர்த்துப் போராடச் சொல்லுகிறது அது. குருட்டுத்தனமான நிலை எதுவும் அது எடுக்கச் சொல்ல வில்லை

No comments:

Post a Comment